
கொச்சி: கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கு பிறகு மும்பை வீரர் ஹர்பஜன் சிங், பஞ்சாப் வீரர் ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்திருந்தார். அது அப்போது சர்ச்சையான நிலையில் அந்த வீடியோ காட்சியை தற்போது மைக்கேல் கிளார்க் உடனான யூடியூப் உரையாடலில் பகிர்ந்துள்ளார் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி.
இது மனித தன்மையற்ற செயல் என ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி, தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளார். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து பல்வேறு முறை ஹர்பஜன் சிங் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீசாந்தும் பலமுறை பேசியுள்ளார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்