
பிரிஸ்பன்: இந்தியா யு-19 மற்றும் ஆஸ்திரேலியா யு-19 அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா யு-19 அணி 49.4 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடக்க வீரரான வைபவ சூர்யவன்ஷி 68 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசிய நிலையில் யாஷ் தேஷ்முக் பந்தில் ஆட்டமிழந்தார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய விஹான் மல்ஹோத்ரா 74 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 70 ரன்களும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் 64 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 71 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா யு-19 அணி சார்பில் வில் பைரோம் 3, யாஷ் தேஷ்முக் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்