‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்திய அணி தகுதி @ ஆசிய கோப்பை கிரிக்கெட்

சென்னை: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சுற்றான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. திங்கட்கிழமை அன்று குரூப் சுற்று ஆட்டத்தில் ஓமன் அணியை ஐக்கிய அரபு அமீரகம் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்