
ஹாங் காங்: ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்‌ஷயா சென் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இரட்டையர் பிரிவில் சாட்விக்-ஷிராக் ஜோடியும் கால் இறுதி சுற்றில் கால்பதித்தது.
ஹாங் காங்கில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 20-ம் நிலை வீரரான இந்தியாவின் லக்‌ஷயா சென், சகநாட்டைச் சேர்ந்த 34-ம் நிலை வீரரான ஹெச்.எஸ்.பிரனாயுடன் மோதினார். இதில் லக்‌ஷயா சென் 15-21, 21-18, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற தொடர்களில் தற்போதுதான் முதன்முறையாக லக்‌ஷயா சென் கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்