
ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை 1-1 என சமனில் முடித்தது. ராவல்பிண்டியில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 333 ரன்கள் எடுத்தது.
அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 404 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 35 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. பாபர் அஸம் 49, முகமது ரிஸ்வான் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்