
அடிலெய்டு: இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. தனது 59-வது அரை சதத்தை அடித்த ரோஹித் சர்மா 97 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்தார். ஸ்ரேயஸ் ஐயர் 77 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், அக்சர் படேல் 41 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் சேர்த்தனர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்