இந்தியா உடனான ஒருநாள் தொடரை வென்றது ஆஸி: 2-வது போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி

அடிலெய்டு: இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 2 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட தொடரை 2-0 என கைப்​பற்​றியது.

அடிலெய்டு ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற 2-வது போட்​டி​யில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 50 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்புக்கு 264 ரன்​கள் எடுத்​தது. தனது 59-வது அரை சதத்தை அடித்த ரோஹித் சர்மா 97 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 73 ரன்​கள் எடுத்​தார். ஸ்ரேயஸ் ஐயர் 77 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 61 ரன்​களும், அக்​சர் படேல் 41 பந்​துகளில், 5 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​களும் சேர்த்​தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்