தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 333 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ராவல்பிண்டி: தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 333 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. சுழற்​பந்து வீச்​சாள​ரான கேசவ் மகா​ராஜ் 7 விக்​கெட்​களை வீழ்த்தி அசத்​தி​னார்.

ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்​தான் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 91 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 259 ரன்​கள் எடுத்​தது. அப்​துல்லா ஷபிக் 57, இமாம் உல் ஹக் 17, கேப்​டன் ஷான் மசூத் 87, பாபர் அஸம் 16, முகமது ரிஸ்​வான் 19 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். சவுத் ஷகீல் 42, சல்​மான் ஆகா 10 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்