மந்தனா, பிரதிகா சதம் விளாசல்: நியூஸியை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி - மகளிர் உலகக் கோப்பை

நவி மும்பை: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் நவி மும்​பை​யில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் மோதின. இதில் இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 53 ரன்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரின் அரையிறுதிக்கு 4-வது அணியாக இந்தியா முன்னேறி உள்ளது.

முதலில் பேட் செய்த இந்​திய அணிக்கு ஸ்மிருதி மந்​த​னா, பிர​திகா ராவல் ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது. தனது 14-வது சதத்தை விளாசிய ஸ்மிருதி மந்​தனா 95 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 109 ரன்​கள் எடுத்த நிலை​யில் பேட்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்