
சென்னை: தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு சங்கம் சார்பில் 6-வது ஜூனியர் மற்றும் 11-வது சீனியர் மாநில அளவிலான பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நீச்சல்குள பயிற்சி வளாகத்தில் நடைபெற்றது.
50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் அதிகாலை 6.30 மணிக்கே நீச்சல்குளத்திற்கு வரவேண்டும் எனவும், 7 மணி முதல் சான்றிதழ் சரிபார்ப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவை முடிந்தபின்னர் 9 மணிக்கு எந்தெந்த பிரிவுகளில் வீரர்கள் பங்கேற்பார்கள் என்பது வகைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்