
சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பெர்த் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடிலெய் டில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்