
சென்னை: தீபாவளி திருநாளை முன்னிட்டு வெள்ளித்திரையில் வெளியான திரைப்படம் ‘பைசன்: காளமாடன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த படத்தின் கதை இந்திய அணியின் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டது.
இந்த படத்தில் 1994 ஆசிய போட்டியில் பாகிஸ்தான் உடன் ரீ-மேட்ச் ஆடும் முக்கிய முடிவை எடுப்பார் அப்போதைய இந்திய கபடி அணியின் கேப்டன் எஸ்.ராஜரத்தினம். இவரும் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னியாகுமரியில் உள்ள கணபதிபுரம் தான் அவரது பூர்வீகம். அர்ஜுனா விருது பெற்ற முதல் தமிழக கபடி வீரர் என அறியப்படுகிறார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்