
பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் இன்று காலை 9 மணிக்கு பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி புதிய கேப்டனான ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது.
சீனியர் பேட்ஸ்மேன்கள் மற்றும் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ளனர். டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து இவர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால் இனிமேல் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்