பும்ராவின் வேகத்தில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா: குல்தீப், சிராஜும் அசத்தல்

கொல்கத்தா: இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பிரிக்க அணி 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஜஸ்​பிரீத் பும்ரா 5 விக்​கெட்​கள் வீழ்த்தி அசத்​தி​னார். குல்​தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் தெம்பா பவுமா பேட்​டிங்கை தேர்வு செய்​தார். அந்த அணி​யில் முன்​னணி வேகப்​பந்து வீச்​சளா​ரான காகிசோ ரபாடா விலா எலும்​பில் ஏற்​பட்ட காயம் காரண​மாக களமிறங்​க​வில்​லை. அவருக்கு பதிலாக கார்​பின் போஷ் சேர்க்​கப்​பட்​டார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்