அர்மேனியாவை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஃபிபா உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது போர்ச்சுகல் அணி

போர்டோ: 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெற்று வரு​கின்றன. இதில் ஐரோப்​பிய நாடு​களுக்​கான தகுதி சுற்​றில் எஃப் பிரி​வில் நேற்று முன்​தினம் இரவு போர்ச்​சுகலின் போர்டோ நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் போர்ச்​சுகல் - அர்​மேனியா அணி​கள் மோதின.

இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெற்​றால் மட்​டுமே உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு பெற முடி​யும் என்ற நெருக்​கடி​யுடன் களமிறங்​கியது போர்ச்சுகல். அந்த அணி​யின் கேப்​ட​னும், நட்​சத்​திர வீரரு​மான கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ, அயர்​லாந்து அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ‘ரெட் கார்​டு’ பெற்​றிருந்​த​தால் அர்​மேனியா அணி​யுட​னான ஆட்டத்​தில் களமிறங்​க​வில்​லை.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்