
மும்பை: ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையுடன் இந்திய மகளிர் அணி, இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
13-வது ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தொடங்கியது. இந்தியா, இலங்கை நாடுகள் இணைந்து இப்போட்டியை நடத்தி வருகின்றன.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்