
மும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், பந்து வீச முடிவு செய்தார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்