“ஒரு அசாதாரணமான ஆல்-ரவுண்டராக...” - ரவீந்திர ஜடேஜாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 

புதுடெல்லி: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “அன்புள்ள ஜடேஜா, ஒரு ஆல்-ரவுண்டராக அசாதாரணமான முறையில் செயல்பட்டீர்கள். உங்களது ஸ்டைலான ஸ்ட்ரோக் ஆட்டத்தையும், ஸ்பின் மற்றும் அற்புதமான ஃபீல்டிங்கையும் கிரிக்கெட் விரும்பிகள் பாராட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக உங்கள் அட்டகாசமான டி20 ஆட்டங்களுக்கு நன்றி. உங்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்