தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி

சென்னை: தென் ஆப்பிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்டதொடரில் இந்திய மகளிர் அணி10 விக்கெட்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிமுதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஷபாலி வர்மா205, ஸ்மிருதி மந்தனா 149 ரன்கள் விளாசினர். இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 3-வது நாள் ஆட்டத்தில் 84.3 ஓவர்களில் 266 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக மரிஸான் காப் 74, சுனே லஸ் 65 ரன்கள் சேர்த்தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்