ரஹானே, ரிங்கு சிங் அதிரடிக்கு பலன் இல்லாமல் போனது: 4 ரன் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது கொல்கத்தா

​கொல்​கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யிடம் போராடி தோல்வி அடைந்​தது. கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று பிற்​பகலில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 238 ரன்​கள் குவித்​தது. தொடக்க வீரர்​களான எய்​டன் மார்க்​ரம், மிட்​செல் மார்ஷ் ஜோடி அதிரடி​யாக விளை​யாடியது. எய்​டன் மார்க்​ரம் 28 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 47 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஹர்​ஷித் ராணா பந்​தில் போல்​டா​னார். முதல் விக்​கெட்​டுக்கு எய்​டன் மார்க்​ரம், மிட்​செல் மார்ஷ் ஜோடி 10.4 ஓவர்​களில் 99 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து களமிறங்​கிய நிகோலஸ் பூரன், மிட்​செல் மார்​ஷுடன் இணைந்து வாணவேடிக்கை நிகழ்த்​தி​னார். 36 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் தனது 7-வது அரை சதத்தை விளாசி​னார் மிட்​செல் மார்​ஷ். நடப்பு சீசனில் இது அவரது 4-வது அரைசத​மாக அமைந்​தது. தொடர்ந்து வருண் சக்​ர​வர்த்தி வீசிய 14-வது ஓவரில் மிட்​செல் மார்​ஷ், நிகோலஸ் பூரன் ஆகியோர் தலா ஒரு சிக்​ஸர் பறக்​க​விட்​டனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்