தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனைக்குத் தடைவிதிக்க முடியாது: ஏடிஆர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தேர்தல் நிதிப் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. அரசியல் கட்சிகள் பெறும் நிதியிலும், வங்கிக்கணக்கிலும் வெளிப்படைத் தன்மை இல்லை என்பதால், தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்வதை நிறுத்த உத்தரவிட வேண்டும்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்