கங்கா விரைவு சாலை திட்டம்: பிரதமர் இன்று தொடங்குகிறார்

லக்னோ: நாட்டின் மிக நீளமான பாதையாக அமைய இருக்கும் கங்கா விரைவுச் சாலை திட்ட கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் மீரட் மற் றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களை இணைக்கும் கங்கா விரைவுச் சாலை திட்டத்துக்கு மாநில அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியது. 10 மாவட்டங்களை இணைக்க உள்ள கங்கா விரைவு சாலை 594 கி.மீ. நீளத்துக்கு அமைய உள்ளது. இது நாட்டிலேயே மிகவும் நீளமான விரைவுச் சாலையாக இருக்கும். இதன் மூலம் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து தேசிய தலைநகர் மண்டல பகுதிக்கு நேரடியாக சாலை வசதி கிடைக்கும்.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்