புதுடெல்லி: ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையை இணைப்பது, ஆண்டுக்கு 4 முறை புதிய வாக்காளர் சேர்ப்பு உள்ளிட்ட 4 தேர்தல் சீர்திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்துக்கு அதிக அதிகாரம் மற்றும் போலி வாக்காளர்களைத் தடுத்தலைப் பிரதானமாக வைத்து இந்தத் தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளன. இதற்கான மசோதாவை நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடும் எனத் தெரிகிறது.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்