ஜனவரி 16 -ம் தேதி அன்று நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும் நிலையில் இதற்கான பிரத்யேக டிஜிட்டல் தளத்தில் கோவிட் தடுப்பூசிகள் இருப்பு நிலவரம், அவற்றின் வெப்பநிலை மற்றும் தடுப்பூசி பயனாளிகளை கண்டறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 79 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் இந்த தளத்தில் தங்களை ஏற்கெனவே பதிவு செய்து கொண்டுள்ளனர்.
பல்வேறு விஷயங்கள் சார்ந்த கொவிட் மேலாண்மை குறித்த நிலைமையை விரிவான முறையில் பிரதமர் ஆய்வு செய்தார். பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபித்த இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு (கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின்) அவசரகால ஒப்புதலை தேசிய ஒழுங்குமுறை அமைப்பு வழங்கியுள்ளது.
Related Posts:
0 கருத்துகள்