லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 8 விக்கெட்டுகளில் எளிதில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த அணிக்கு இந்த சீசனில் இது 2-வது வெற்றியாக அமைந்துள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் பிரப்சிம்ரான் சிங், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நேஹல் வதேரா ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. லக்னோ அணியின் பலமே அதன் அதிரடி பேட்ஸ்மேன்கள் தான். ஆனால், பஞ்சாப் உடனான ஆட்டத்தில் அவர்கள் சீரான இடைவெளியில் அவர்கள் ஆட்டமிழந்தனர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்