கறுப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்தை வரியில்லாமல் இறக்குமதி செய்யலாம்: டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி

கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் பாதிக்கப்படும் கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு தேவையான ஆம்போடெரசின்-பி மருந்தை இறக்குமதிவரி இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

அதேசமயம், இறக்குமதி வரியை தள்ளுபடி செய்வது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கும்வரை இறக்குமதியாளர் உறுதிமொழிப்பத்திரம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்