டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு: பிசிசிஐ-யிடம் விராட் கோலி ‘பகிர்ந்த’ விருப்பம்!

இங்கிலாந்து தொடர் வரவிருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்துள்ளார். தான் ஓய்வு பெற விரும்புவதாக ஒரு மாதம் முன்பே பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்து விட்டதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன.

இங்கிலாந்து தொடரில் ஆட விரும்பவில்லை என்பதில் கோலி தீவிரமாக இருந்தால் அவரது 14 ஆண்டு கால சிறப்புமிக்க கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று நாம் கூறிவிடலாம். 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார், அதில் 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார். இதில் 9,230 ரன்களை 46.85 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்