அதிவேக சதம் விளாசி இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சாதனை! @ U-19 ODI

லண்டன்: 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து யு19 அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சனிக்கிழமை இந்த சாதனையை அவர் படைத்தார்.

இந்தப் போட்டியில் 52 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி சதம் விளாசினார். இதன் மூலம் 53 பந்துகளில் சதம் விளாசிய பாகிஸ்தானின் கம்ரான் குலாம் சாதனையை அவர் முறியடித்தார். இந்த ஆட்டத்தில் 78 பந்துகளில் 143 ரன்களை அவர் எடுத்தார். 13 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 183.33. இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 364 ரன்கள் இலக்கை விரட்டுகிறது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்