மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன் விகிதம் (1.274) அனைத்து அணிகளைவிட அதிகமாக உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் நேரடியாக தகுதி பெற வேண்டுமானால் எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெறவேண்டும் என சூழ்நிலையில் மும்பை அணி உள்ளது.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்