புனேயில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு: இரவு 11 முதல் காலை 6 வரை மக்களுக்குத் தடை: பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து அங்கு மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இரவு 11 மணியிலிருந்து காலை 6 மணிவரை அத்தியாவசியமற்ற செயல்களுக்குத் தடைவிதித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகள், தனியார் பயிற்சி நிலையங்கள் ஆகியவை வரும் 28-ம் தேதிவரை விடுமுறை அளிக்கவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள், அடுத்த ஒருவாரத்துக்கு இரவு 11 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று புனே மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்